SlidePub
Home
Categories
Login
Register
Home
General
Sri Lalitha Sahasranamam.pdf
Sri Lalitha Sahasranamam.pdf
3,583 views
8 slides
Apr 06, 2023
Slide
1
of 8
Previous
Next
1
2
3
4
5
6
7
8
About This Presentation
sri
Size:
83.36 KB
Language:
none
Added:
Apr 06, 2023
Slides:
8 pages
Slide Content
Slide 1
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
===================
ஸிந்தூரமேனியளேமுக்கன்னியே
சந்திரன் ஒளிவீசும் மாணிக்கக் கிரீடமும் அணிந்தவளே
எழில் நகைமுகத்தவளேஅழகிய மார்பினளே
ரத்தினக் கலசமும்செங்குவளைமலர் கரங்களும்
அழகிய திருவடி தாமரைஅம்பிகையைதியானிக்கிறேன் அன்னையே
பொன்னிறமேனியில் கடலெனக் கருணைமழைகண்களில்
பாசம் அங்குசம் புஷ்ப பாணம் கரும்புவில் கரங்களில்
அணிமாதி சக்திகள் ஆள்பவளைபரதேவதையை
பவானியைஅஹு எனும் தத்துவமாய் பாவிக்கிறேன்
தாமரையில் அமர்ந்தவளைமலர்ந்த திருமுகத்தாளை
குமுதக் கண்ணாளைபொன்னொளியாளை
பட்டாடைதரித்தவளைபொற்றாமரையைக்கையில்பெற்றாளை
ஸர்வாலங்கார பூஷணியைஆதரிப்பவளை
பக்தரைக் காப்பவளைபவானியை
ஸ்ரீ வித்யா ரூபிணியைசாந்த மூர்த்தியை
தேவர்கள் துதிப்பவளைஸகல சம்பத்தும் அருள்பவளை
எப்போதும் தியானிக்கிறேன்
குங்கும நிறத்தாளைவண்டுகள் வட்டமிடும்
கஸ்தூரி அணிந்தவளைபுன்னகைவதனமும்
அம்பு வில் பாசாங்குசம் கரத்தில் உடையவளை
பக்தரைவசீகரிப்பவளைசெந்நிறஆபரணமும்
மேனியும்கொண்டாளைசெம்பருத்தி நிறத்தாளை
பூஜைவேளையில் எப்போதும் சிந்திக்கிறேன்
புவனியேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
ஓம் அன்னையேஉலகைக் காப்பவளேசிம்ம வாஹினியே
அறிவெனும் அக்னியில் உதித்தவளேதேவரின் துணையே
உதய சூரிய ஒளியேநான்கு திருக்கரம் உடையவளே
பாசம் அங்குசம் ஏந்தி ஆசைஅதர்மம் அழிப்பவளே
மனமெனும் கரும்பு வில்லும்
,
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்த பானமும்
ஏந்தி ரட்சிக்கும்செந்நிறத்தவளேஎல்லாமும் ஆனவளே
சம்பக அஸோக புன்னாகசெளகந்திக பூக்களைஅணிந்தவளே
பத்ம ராகம் பிரகாசிக்கும் கிரீடம் அணிந்தவளே
பிறைஒளி ப்ரகாசிக்கும்நெற்றியைஉடையவளே
சந்திரனின் களங்கமெனநெற்றியில் கஸ்தூரி திலகமே
மங்களமுகத்தின்தோரணம் உன் புருவமே
முகமெனும் அழகுவெள்ளத்தில் மீன் எனக் கண்கள் துள்ளுமே
மூக்கிலேசெண்பக மலர் நளினமாய் மலருமே
மூக்குத்தியில்வைரங்கள் நட்சத்திரத்தைபழிக்குமே
செவியிலேகதம்ப மலர் பூத்து புன்னகைக்குமே
சந்திரன் சூரியன்தோடுகளாய் ஆடிடுமே
கன்னத்தின் ஒளி பத்ம ராகக் கண்ணாடியைவிஞ்சிடுமே
பவளமும்கோவைப் பழமும் இதழ்களைகண்டுவெட்கிடுமே
சுத்த அறிவேபல் வரிசையாய் பளபளக்குமே
எத்திசையும் மணக்கும் கற்பூர வீடிகைதாம்பூலமே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
வீணையில் நாதமேஉன்மொழியிலேகொஞ்சுமே
காமேஸ்ரன் மனப் பிரவாகத்தில் விளையாடும் புன்சிரிப்பே
வர்ணனைக்கெட்டாத அழகான முகவாயே
காமேஸ்வரனின் மங்களமாங்கல்யம்பொன் கழுத்திலே
Slide 2
மின்னிடும்பொன்னிலேதோள்வளைதொங்கவே
அசையும் முத்து ரத்தினம்வேண்டுவதைத் தரும் சக்தியிடமே
காமேஸ்வரன் அன்பேரத்தினக் கலசம் உன் மார்பே
நாபியிலேமுளைத்த உரோமக்கொடி தாங்கிடும் ஸ்தனமே
கொடியைத் தாங்கிடும்மெல்லிடையாளே
ஸ்தான பாரம் தாங்கிடும் மணி வயிற்றில் மூன்று பட்டையும்
இடையிலேபட்டாடைசெந்நிறஒளி காட்ட
அழகிய அரைஞாணில் ரத்ன சதங்கைகலகலப்ப
காமேஸன் அறியும் அழகியதொடையின்மென்மையே
முழங்காலில் சில்லுகள் மாணிக்க மகுடமே
இந்த்ரகோபம்மொய்க்கும் மன்மத அம்பாரமோஉன் கழல்கள்
ஆமையின் முதுகென வளைந்ததுபொற்பாதம்
அகத்திருளைப்போக்கும் நகக்கண்கள் உடையவளே
தாமரையைப் பழிக்கும் அழகான திருப்பாதமே
அழகுக் களஞ்சியமேஇரத்தின சிலபொலிக்கும்பொற்கழல்களே
அன்ன நடையாளேஅழகுக்கு அணிசெய்யும் அழகே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
பாதாதிகேசம் அழகின் ஆட்சியேசிவந்தவளே
சிவசக்தி வடிவேகாமேஸ்வரன் மடியில் அமர்ந்தவளே
ஸ்ரீ நகர நாயகியேமேருவின் சிகர வாஸியே
சிந்தாமணி உறைவிடமேப்ரஹ்ம விஷ்ணு ருத்ர ஈசான ஸதாசிவாசனமே
தாமரைக் காட்டிலேகதம்பவன வாஸினியே
அம்ருதக் கடலின் நடுவிலேஅருட் பார்வையால் பாலிப்பவளே
தேவரும் முனிவரும்போற்றும் ஆத்மவைபவி
பண்டாசுரனைவதைக்கும்சேனையின் சக்தி
சம்பத்கரீ சக்தியின் கஜப்படைசூழ்பவளே
பாசத்திலேஉதயமான புரவிப்படைகொண்டவளே
ஸர்வாயுதங்கள் சூழும் ஒன்பது படி ஸ்ரீ சக்ரத்தேரிலே
ஏழுநிலைகேயச் சக்ர மந்த்ரிணீதொழும்தேவியே
கிரி சக்ரத்தேரிலேவராஹி வந்து வழி காட்டவே
ஜ்வாலா மாலினியின்ஜொலிக்கும்கோட்டையில் இருப்பவளே
பண்டாசுரப்போரில் படைவீரத்தில் மகிழ்பவளே
நித்யதேவதைகளின் வீரத்தில் ஆர்வம் உள்ளவளே
பாலாதேவி பார்வையில் பண்டாஸுரமைந்தர் புறங்காட்டவே
விஷங்களைவிசுக்ரனைமாந்த்ரீணீ தண்டினீ தண்டிக்கவே
விசுக்கரனைக்கொன்றவாராஹியைப் புகழ்பவளே
காமேஸ்வரன் கடைக்கண்நோக்க கணேசன் அவதாரக் காரணியே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
விசுக்ரனின் விக்னத்தைவிரட்டிய கணேசனைக்கொஞ்சிடும் அன்னையே
பண்டாசுரனின் படைநடுங்க அம்பு மழைபொழிந்தவளே
நகங்களால் நாராயணனின் தசாவதாரம்தோற்றுவித்தவளே
படைகளைபாசுபதாஸ்திரத்தால் பஸ்பம்செய்தவளே
காமேஸ்வராஸ்திரத்தால் பண்டாசுர சூன்யத்தைஎரித்தவளே
தேவ கார்ய பூர்த்தியால் மூவரால்தேவரால் துதிக்கப்பட்டவளே
மன்மதனைஉயிர்ப்பித்த சஞ்சீவினி நீயே
பஞ்சத சாக்ஷரீ மந்திரத்தின் வாக்பவ கூடமேதாமரைமுகமே
அழகிய கழுத்தின் கீழ் மலரும் மத்ய கூட வடிவமே
இடையின் கீழ் சக்தி கூட சாந்நித்ய பாகமே
மூலமந்த்ர கூடத்தின்பொருளேமூலவேத மந்த்ர உட்பொருளே
அமிர்தம் எனும் குலாம்ருதம் பருகியோக ரஹஸ்யங்களைகாப்பவளே
பதிவ்ரதயேசிவசக்தி வடிவமெனும்கெளலினீ குலயோகினியே
ஆறு ஆதாரத்திற்கு உள்ளும்வெளியும் உறையும்தேவியே
மூலாதாரக் குண்டலினீயேப்ரம்ம முடிச்சுதனைபிளப்பவளே
விஷ்ணு முடிச்சுதனைபிளந்து மணிபூரகத்தில் காட்சி தரும் அம்பிகையே
புருவ மத்தியில் சக்தியேருத்ர கிரந்தியைப் பிளப்பவளே
ஸஹஸ்ரா ரத்தில் ஏறி அம்ருதத்தைபெருகச்செய்பவளே
ஆறு ஆதாரத்திற்கும் அப்பாற்பட்டவளேமின்னல்கொடியே
Slide 3
பக்தப்ரியேகுண்டலினியேதாமரைத் தண்டினும்மெல்லியளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
பிறவித்தனைஅறுக்கும் பவானியேபாவனையால் அடையத் தகுந்தவளே
பக்தருக்கு மங்களம்செளபாக்யம் தரும் அன்னையே
பக்திக்கு வசமாகும் பக்தப்ரியேஅச்சம் தவிப்பவளே
சாரதா நவராத்ரிதேவி சம்பு நாயகி சுகம் தரும் சிவ பத்னியே
சங்கரி ஸ்ரீகரி சாந்தசொரூபிணி முழு நிலவொளியே
ஆதாரமிலா ஆதாரமேகுற்றமற்றகோமகளே
தூயவளேபற்றிலா நிலைப்பொருளேகலக்கத்திற்கு எட்டாதவளே
பிரிக்கவொணா முக்குணத்திற்கப்பாற்பட்டவளேஅழிவற்றசாந்த மூர்த்தியே
பஞ்ச பூத்திற்கப்பாற்பட்ட முக்தி ரூபிணியேஆதாரமற்றவளே
குற்றமிலாவெள்ளைஉள்ளமேஒன்றானவளேவிழிப்புடன் இருப்பவளே
காரணத்தின் காரணியேகுற்றமிலா அறிவேதனித்தவளேதானேஆள்பவளே
பற்றற்றவளேஆசையைஅழித்து மனோதிடம் தருபவளேஆணவம் அழிப்பவளே
அகங்காரமிலா ஆதியேகவலையற்றவளேமதிமயக்கம் இல்லாதவளே
அஞ்ஞானம் தன்னலம் அகற்றும் பாபமற்றவளேபாவத்தின் அந்தமே
கோபமற்றவளேஐயம்பேராசைஇல்லாதவளேஅகற்றுபவளே
பக்தரின் ஐயம்போக்கும் பிறவிப் பிணி அகற்றும் ஆதி அந்தம் இல்லாதவளே
விருப்பமற்றவேற்றுமைஇலாத திடஸ்வரூபிணியே
பேதங்கள்போக்கும் கால பயம் நீக்கும் அழிவற்றவளேசெயலுக்கு அப்பாற்பட்டவளே
இணைஇலாதவளேகருங்கூந்தலுடையவளேஆபத்தில் அணைப்பவளே
அரிதானவளேநியதிகளைக் காப்பவளேதுக்கத்தைதுடைத்துமோட்சம் தருபவளே
தீமைக்குத் தீயானவளே
,
சாஸ்திரங்களைக் காப்பவளேகுற்றமற்றவளே
அனைத்தும் அறிந்த கருணைக் கடலேநிகரற்றவளே
சக்திரூபிணி மங்களநாயகி ஸர்வேஸ்வரி நற்கதி தரும் நாயகி
ஸகல மந்திரமாகி ஸகல வடிவாமாகி நிறைந்தவளே
ஸர்வ யந்த்ர தந்த்ர ரூபிணி சக்ர நாயகி
மஹேஸ்வரப்ரியா மஹேஸ்வரி மகாலட்சுமி ரூபிணி
மூவரும்போற்றிடும்பேருருவேபிரியவளேபாதகநாசினி
சக்தி ரூபிணி ஆனந்த மளிக்கும் அற்புத சக்தி சாலினி
போகம்செல்வம் வல்லமைகீர்த்தி நிறைந்தவளே
அஷ்டமாசித்தி தாயினிபேரறிவுச்செல்வி மூவருக்கும் ஈஸ்வரி
தந்த்ர மந்த்ர யந்த்ர வித்தையின் முதல்வியே
வேள்விகள் வணங்கும் மஹாபைரவர் பூஜிக்கும் ஆதிசக்தியே
மஹாதேவனின் பிரளய மஹாதாண்டவ சாட்சியே
மஹா காமேஸ்வரா ராணி ஸ்ரீ சக்ர மஹா திரிபுர சுந்தரியே
அறுபத்து நான்கு உபசாரங்கள்கொண்டாடும் அறுபத்து நான்கு கலைவடிவே
அறுபத்து நான்குகோடிமோகினி கணங்கள் வணங்கும் ஒளியே
மனு சந்திரன் வணங்கும் சந்த்ர மண்டல மத்ய வாஸினியே
அழகின் ரூபமேஅழகு உன் புன்சிரிப்பேஅழகு சந்த்ர கலைதரித்தவளே
அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்ட நாயகி ஸ்ரீ சக்ர வாஸினி
தாமரைக் கண்ணியேபர்வத ராஜகுமாரி உன் பத்மராக ஒளி கண்களிலே
அன்னையேஉமையேலலிதாம்பிகையேசரணம்
பஞ்சப் பிரம்மம் உன் ஆஸனம் பஞ்சபிரம்ம ரூபிணியே
விஞ்ஞான சக்தியேசைதன்ய ரூபிணிபேரின்ப வடிவே
தியானமேதியானிப்பவளேதியானவடிவேதர்ம அதர்மம் கடந்தவளே
விழிப்பு நீ கனவு நீ சூட்சுமவடிவு நீ அகிலாண்டமும் நீ
கனவற்றநிலையேகாரண சரீரமேதுர்ய நிலையேஅதற்கப்பாலும் நீயே
படைப்பவளேகாப்பவளேபிரம்ம வடிவேகோவிந்த ரூபிணியே
ப்ரளயத்தில் உலகைஅடக்கி மறைப்பவளேருத்ர ரூபிணியே
சதாசிவ ரூபிணி ஸ்ருஷ்டி ஸ்திதி லய திரோதாளஅருக்ரஹ நாயகி
பைரவி சூர்ய மண்டல வாஸினி நட்சத்திர மாலைசூடும் நாரணி
தாமரைவாஸினிசெல்வ நாயகி பத்மநாப சகோதரி
கண் இமைதிறந்து காப்பவளேகண் இமைமூடி அழிப்பவளே
ஆயிரம் கண்கள் சிரசுகள் முகங்கள் பாதங்கள்கொண்ட ஆதி நாயகி
ஓரறிவு உயிர் முதலாய் எல்லா உயிர்களையும் கருவில் காக்கும் தாயே
Slide 4
வர்ண தர்மங்கள் காத்துவேத வழி காட்டி பலனளிப்பவளே
பாத தூளியேசெந்தூரம் மங்கையர்நெற்றிக் குங்குமம்
வேதமெனும் சிப்பியில் விளைந்திட்ட நல்முத்தே
அறம்பொருள் இன்பம் வீடு தந்து ப்ரம்மானந்தம் காட்டி
ஈரேழுலோகமும் மூவரும் துதிக்கும் முச்சக்தி பிறப்பிடமே
நாராயணி நாத வடிவேஅருவமேமுத்தொழில் நாயகி
எங்கும் நிறைந்த அகங்காரமிலா தவளேவிருப்புவெறுப்பற்றவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
ராஜாதிராஜர் பூஜிக்கும் ராணி தாமரைக் கண் அழகியே
பக்தருடன் விளையாடி ஆத்மரசம் தருபவளேகலகலக்கும் ஒட்டியாணம் அணிபவளே
நிலவுத் திருமுக திருமகளேரதியேரதிக்குப் ப்ரியமானவளே
அரக்கரைஅழிப்பவளேகணவனைப் பிரியா காரிகையே
வேண்டும் வரம் தரும் காமக்கலைவடிவேகதம்ப மலரில் ப்ரியமுள்ளவளே
மங்களம் விரும்பும் மங்களவடிவேஉலகின்வேரேகருணைக் கடலே
64
கலைவடிவமேபேச்சில் வல்லவளேஎழில் நிறைவேகாதம்பரி ப்ரியே
வரம் தரும் விழியாளேவாருணி நாடியின் ஆனந்தத்தேன் ஆனந்தமே
வேதங்கள் அறியும் தத்துவத் தலைவியேவிந்த்யமலைவாஸியே
உலகைதாங்கும்வேதத் தாயேவிஷ்ணுமாயேஅடியவர் ஆனந்தம் உன் இலக்கே
க்ஷேத்ர வடிவேக்ஷேத்ர தலைவியேஉடல் உயிர் பாலிப்பவளே
உயிரின் ஆக்கமும் அழிவும் உன்னாலேபைரவர் பூஜிக்கும்பைரவியே
வெற்றிலைத் தலைவி சுத்ததெளிவு நீ எல்லோரும் வணங்கும்தெய்வம் நீ
பக்தருக்குத் தாய் நீ வாக்கின் சக்தியான வாமகேஸ்வர மூலாதார வாஸினி
கற்பகமேமோக பந்தகோப மாயா அறியாமைநீக்குவாய்
அதர்மத்தைநசித்தேநல்வழி நடத்துவாய்
உடல் மனம் ஆன்மாவின் துன்பத்தைநீக்கும் இளமையானவளே
முனிவர் துதிக்கும்மெல்லிடையாளேஅறியாமைஅகற்றுபவளே
ஞான வடிவேதத்வமணி வாக்கியப்பொருளே
நீ தரும் ஆனந்தம் ப்ரம்மானந்தத்தைவிஞ்சிடுமே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
பரா எனும் சப்தரூபிணி ஞானம் தரும் சக்தியேஇடைநிலைஅவதார வடிவே
வாக்கின் ரூபமேபக்தரின் மன நீரோடையின் அன்னமே
காமேஸ்வரனின்ஜீவநாடியேஸர்வலோக சாட்சியே
மன்மதன் பூஜிக்கும் சிருங்கார ரசமேஜயமேஜலாந்த்தர பீடவாஸியே
ஆக்ஞா சக்ரவாஸினி பிந்து மண்டல வாஸினி
ப்ரார்தனையில் வசப்படும் ரஹஸ்ய யாகத்தில் மகிழ்பவளே
ஸர்வ சாட்சியாய் விரைந்து அருள்பவளேஸாட்சி இலாதவளே
ஆறு அங்கதேவதைகள் குணங்கள் உடன்கொண்டவளே
இணையற்றகருணா ரூபிணியேபேரானந்தபெருவாழ்வு தருபவளே
16
நித்யதேவதைவடிவேஅழகிய கழுத்துடன் அர்த்தநாரீஸ்வரியாய் தரிசனமே
ப்ரகாச ஒளியேசிவப்ரகாசம் உன்னிடமேஅடியார் அறிபவளே
அருளாட்சி புரியும் நித்ய ரூபமேவெள்ளைமனத்தாளே
எங்கும் நிறைந்த ப்ரஹ்மாண்டசொரூபமே
அறிவேஅறியாமையேகாமேஸ்வரனின் அல்லிமலர் கண்ணைதிறக்கும் நிலவே
அறியாமைஇருளகற்றும் சூர்ய கிரணமே
சிவபக்தர் அடையும் திருப்பாதமேசதாசிவன் பூஜிக்கும் மங்களமே
சிவப்ரியேசிவனன்றி ஏது உன் துணையேநல்லோரைநாடுபவளே
சுயம்பிரகாசியேமனம் வாக்கிற்கெட்டாதவளேஎல்லையற்றவளே
ஞான வடிவேஉள்ளுணர்வேகாலமேசூரிய ஒளியே
யாரும் அறியாதவளேகாயத்ரி ரூபமேசந்த்யாகாலமேஉயிர்கள்தொழுபவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
மேலான தத்துவமேபரமார்த்த ரூபமேசுகனப் ப்ரம்மமே
அன்புத் தாயேசிறந்தவளேபஞ்சகோச வாஸியேபிரம்மானந்தமே
ஆனந்த களிப்பாடும்செந்நிறக் கண்ணழகி கஸ்தூரி பாதிரி திகழும் கன்னமே
சந்தனம் சாற்றிய அங்கமேஷண்பக மலர் உனக்கு விருப்பமே
பராக்ரமசாலியேஎழில் உன்தேகமேஸ்ரீ சக்ர வாஸமே
குலத்தின் ஈஸ்வரியேமூலாதார வாஸினியேகெளலமார்கம் உனைத்தொழுமே
Slide 5
கணபதி கந்தன் தாயேமகிழ்ச்சி மலரும் புஷ்ப வடிவே
அமைதியேஒளியேநந்தினியேவிக்ன நாசினியே
தேஜஸ்வினி முக்கண்ணி அழகியேஅக்ஷர மாலைஅணிபவளே
அன்னமும் ஆராதிக்கும் அன்னையேமலைவாஸினி
வசீகர முகமேமென்மையேஅழகு உன் புருவமேமங்களரூபமே
தேவர் தலைவி காலகண்டன் துணைவி ஸ்ருஷ்டி நாயகி சூட்சுமரூபிணி
நித்யதேவதையேவாமதேவன் இடப் பாகம் அமர்ந்தவளே
குமரியேசித்தர்களின் தாயேதலைவியேவித்யா ரூபிணியே
கமலா விசுத்தி சக்ரவாஸினி கருஞ்சிவப்பு நிறத்தவளே
முக்கண்ணியேகபாலம் கட்வாங்கம் ஏந்தியவளேஏகமுகத்தவளே
பாயஸப் ப்ரியேதோல் திசுக்களில் உறைபவளேஅறியாதவர்க்கு பயம் தருபவளே
அம்ருதா சக்தி சூழ்பவளேவிசுத்தி சக்ரத்தில் டாகினீஸ்வரி உன் நாமமே
அனாஹத சக்ரவாஸினி கரும் பச்சைஉன் வர்ணமே
இரு முகம்கோரைப் பற்களும் உடையவளேஜபமாலைதரித்து உதிரத்தில் உறைபவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
காளராத்ரி சக்தி சூழ்பவளேநெய்யன்ன ப்ரியே
ஞானிகளுக்கு வரமளிப்பவளேராகினீ நாமம் உடையவளே
மணிப்பூர சக்ரம் வஸிப்பவளேமூன்று முகத்தவளே
சக்தி தண்டம் அபயமுத்திரா தரித்தவளேடாமாரியோகினிகள் சூழ்பவளே
செந்நிறத்தவளேசதைத் திசுக்களில் உறைபவளேசக்கரைபொங்கல் ப்ரித்தீயே
பக்தருக்கு நலம் தருபவளேவகினீ எனும் அன்னையே
சுவாதிஷ்டான நாயகியேநான்கு முகத்தவளேபொன் நிறத்தவளே
சூலம் பாசம் கபாலம் ஏந்தியவளேஅழகின் கர்வமோஎனும்தோற்றத்தவளே
கொழுப்புத் தாதுக்களில் இருப்பவளேதேனைவிரும்புவளே
பத்ரகாளி மகாமாயா சூழ்பவளேதயிரன்னப்ரியேகாகினி ரூபதேவியே
மூலாதாரம் உறையும் ஐந்து முகம்கொண்ட என்புக்குரியவளே
அங்குசம் தாமரைபுத்தகம் ஞான முத்திரைஏந்தியவளேவரதாயோகினிகள் சூழ்பவளே
வெண்பொங்கலைவிரும்பும் ஸாகினீ நாமம்கொண்டவளே
ஆக்ஞாசக்ர வாஸினியேவெண் நிறத்தவளேஆறுமுகம்கொண்டவளே
ஹம்ஸவதி சக்தியுடன் புத்தியில் உறைபவளே
ஹாகினி ரூபிணி மஞ்சள்பொங்கலில் ப்ரிதி அடைபவளே
ஆயிரம் இதழ் தாமரைவாஸம் சித்ர வர்ணங்கள் அழகுசேர்க்கும்
ஸர்வ ஆயுதங்களும் கரம் ஏந்தும் சுக்கில தாதுதேவதையேஸர்வமும் உன் முகமே
யாகினியேஸ்வாஹா ஸ்வதா வடிவேபுத்தியேஅவித்தையே
வேதமாதாவேதவிதியேஎல்லா அன்னத்திலும் ப்ரியமுள்ளஉயர்ந்தவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
புண்ணியப் புகழேபுண்ணியப் பலனேஉன்தோத்திரம் புண்ணியமே
இந்த்ராணியின்தெய்வமேஅலையெனச்சுருளும் உன்கேசமேபிறவிப் பிணி தீர்ப்பவளே
விமரிசன வித்தைவடிவேஆகாயம் படைத்தவளே
ஸர்வரோக நிவாரணி மரண பயம் தவிர்ப்பவளே
முதற்பொருளேஅறிவு மனதிற்கேட்டாதவளேகலிதோஷ ஹாரிணியே
காத்யாயணி காலனின் முடிவேவிஷ்ணுவும் ஆராதிப்பவளே
தாம்பூலம் மணக்கும்செவ்வாயும் மாதுளம்பூமேனியும் மான் விழியும்
மோகம் தருமேதேவதைகளின் தலைவியேசூரிய வடிவேசுகம் அளிப்பாய்
நிறைந்தவளேபக்தரின்செல்வமேஆள்பவளேதலைவியே
நல்லவர்க்கு எளியவளேமகா ப்ரளய சாட்சியே
பராசக்தி நிஷ்டையின் முடிவேமுதல் அறிவேதிராட்சா ரசத்தால் குளிர்பவளே
அகங்கார ரூபிணியேஅட்சரங்களின் ஒலி வடிவே
கைலாஸ வாஸினிமெல்லியதோள்கள் தாமரைக்கொடியே
வழிபடத் தகுந்தவளேகருணைவடிவேபேரரசியே
ஆத்ம வித்யாசொரூபிணி நவதுர்கா மந்த்ர ஸ்ரீவித்யா வடிவே
மன்மதன் துதிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மும்மூன்றரின் மந்த்ர வடிவே
அருட்பார்வைகோடிலக்ஷ்மி கடாட்சம் ப்ரம்மேந்திர மஹாபிந்து வாஸம்
பூரண சந்த்ர முகம்நெற்றி புவனேஸ்வரி பீஜம் உன் ஒலி வானவில்லாகும்
இதயத்தில் சூர்ய ப்ரகாசம் மூலாதார முக்கோண தீபம் தட்ச புத்திரி
பரமசிவ நாயகி அசுரர்குல நாஸினி தட்சயாகத்தின் முடிவு நீ
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
Slide 6
சலிக்கும் கண்களும் புன்சிரிப்போடு முகமும்கொண்ட குணவதியே
குரு ரூபிணி காமதேனுவேகுமரனின் அன்னையே
தேவராணி நியாயத்தின் சாஸ்திரமேஇதயத் தாமரைஇருப்பிடமே
பதினைந்து திதி மண்டலங்கள் உனைவணங்குமேஅண்டமெல்லாம் உன்சேயே
கலைவடிவேகலைத் தலைவியேகாவ்ய வர்ணனையில் மகிழ்பவளே
அலைமகளும் கலைமகளும் அனுதினம் வீசுவார் சாமரமே
ஆதிசக்தியேஆதாரசக்தியேஅளவிலாதவளேஆத்மாவாக இருப்பவளே
பிறந்தவளேதூயவளேஅழகு உன் உருவமே
க்லீங்கார பீஜமேரீங்கார வடிவமேஇரகசியமாவளேமுக்தி தருபவளே
முப்புரத்தில் உறைபவளேமும்மூர்த்தி வடிவேதேவர் தலைவியே
மூன்று அட்சர வடிவேநறுமணத்தவளேநெற்றியில் துலங்கும் சிந்தூரமே
உமா பர்வத ராஜகுமாரிவெண்மைநிறத்தவளேகந்தர்வர் துதிப்பவளே
உலகத்தைஉடையவளேவருண பீஜஅக்ஷரவேதத் தாயேஅசுரர் முடிவே
வாக்கின் தலைவியேதியானப்பொருளேஞானம் தரும் ஞான உருவேஅறிய முடியாதவளே
வேத முடிவால் அறியப்படுபவளேசத்ய ஞான வடிவே
லோபா முத்ரையால் பூஜிக்கப்பட்டவளேஉலகைப் படைத்தல் உனக்கு விளையாட்டே
உன்னையன்றிவேறொன்றில்லைஊனக் கண் உன்னைஅறிவதில்லைஎல்லாம் அறிந்தவளே
யோகரூபிணியோகா முடிவேயோகமும்யோக நித்திரையும் ஆனந்தமேஉலகின் அச்சாணியே
இச்சா ஞான க்ரியா சக்தி வடிவேஆதாரமானவளே
உயர்ந்தது உன் இருப்பிடமேஇருப்பதும் இல்லாததும் உன்பொறுப்பே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
எட்டு வடிவேஅறியாமைஅகற்றுபவளேவாழ்க்கைஉன் திருவுளமே
தனித்தவளேஆதார வடிவேஇரண்டாக அதற்கும்மேலாக இருப்பவளே
அன்னமும் ஐஸ்வர்யமும் தருபவளேமுதிர்ந்தவளேபரமாத்ம ரூபிணி
பெரிய நாயகி சிவபத்னி சரஸ்வதி ப்ரஸ்மானந்தினி வீரம் உனக்கு விருப்பமேமொழி வடிவேசேனைத் தலைவி ஆக்கம்
அழிவ
ற்றவளே
எளிமையானவளேமங்களமேநித்யானந்தம் தருவாய்
ராஜராஜேஸ்வரி ராஜ்ஜியம் தருபவளேகருணைஉள்ளவளே
ஆள்பவரைஅன்பால் ஆள்பவளேராஜபோகம் தருபவளே
செல்வமேகோஷங்களின் தலைவி படைகளின் அரசி
பக்தருக்குபேரரசு தரும் சத்தயவதி ஏழு கடலும் உன் இடையில் ஒட்டியாணமே
தீட்சையின் வடிவேஅசுரரைஅழிக்கும் புவனேஸ்வரி
தர்மார்த்த காமமோக்ஷம் அழிக்கும் சிவசக்திபேரானந்த அறிவு நீ
காலம் இடம் உனைஅணுகாது நிறைந்தவளேமயக்கம் தருபவளே
ஞானசக்தி சாஸ்த்ர வடிவேகுகனின் தாயேரஹஸ்ய வடிவே
எல்லையற்றவளேசதாசிவ பத்னி தூய்மையின் வடிவே
தர்ம ரூபிணி குரு மண்டல வடிவே
மாயாஸ்வரூபிணி சூர்ய மண்டல பூஜைஏற்பவளேஏழாவதுயோகவடிவே
பூமியேகணபதி தாயேஇதயக் கமல பூஜா நாயகி சிவபத்னியே
சுதந்திரமான தந்த்ரங்களின் அரசி தட்சிணாமூர்த்தி வரவே
சனகாதி முனிவர் ஆராதிப்பவளேசிவதத்வம்சொல்பவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
அறிவேபேரானந்த சக்தியேஅன்பின் வடிவேவேண்டுவதைதருபவளே
நாம பாராயணத்தில் மகிழ்பவளேநந்தி துதிக்கும் வித்யா ரூபிணி நடராஜநாயகி
மாயத்தின் மூலமேமுக்தி வடிவேமுக்தி தருபவளேநடன பிரியே
லயிக்கச்செய்பவளேகண்ணிய வடிவேரம்பையும் வணங்கும் அம்பிகையே
பிரவித் தீயைத் தணிக்கும் அம்ருதமேபாவத்தின் அந்தமான அனலே
துன்பம் துயரத்தைவிரட்டும் சுழற்காற்றேமூப்பின் வடிவான சூர்ய ஒளியே
கடலின்பேறான நிலவேமனமெனும் மயிலின்மேகமே
நோய்களைத் தீர்க்கும் வஜ்ராயுதமேகாலனைக் கடியும்கோடாலியே
அரசியேகாளியேபிரளயத்தில் உலகு உனக்கொரு கவளமே
மலையென உண்பவளேதீயவர்க்கு தீயேசண்டமுண்ட நாஸினி துர்கையே
அழிவு நீ நிலையானது நீ ஈரேழு உலகத் தலைவி உலகைக் காப்பவளே
அறம்பொருள் இன்பம் தரும்செளபாக்யமேமுக்கண்ணியேமுக்குணமே
சொர்க்கம்மோட்சம் தருபவளேதூயவளேசெம்பருத்தி நிறைந்தவளே
கூர்மையும் வன்மையுமான இந்த்ரியமேதேஜஸ்வீவேள்வி வரவேவிரத்ப்ரியே
Slide 7
புலனடக்கமின்றி உன் அருள் வருமோபாதிரிப் பூவில் ப்ரியமுள்ளவளே
பெரியவளேமேருமலைவாஸினி மந்ததாரப் பூவில் மனம் மயங்குபவளே
வீரர் வணங்கிடுவார் உன்னைப்ரபஞ்ச வடிவேகுற்றமற்றவளே
எங்கும் உன் முகமேஆன்ம வடிவேஆகாய ரூபிணி உயிரைத் தரும் உயிரே
மார்த்தாண்டபைரவர் பூஜித்தவளேராஜேஸ்யாமளாசெய்வாள் உன் ராஜபரிபாலனமே
திரிபுரத்தின் அரசி பகையைவெல்லும் உன் படையேபரமேஅபரமேசத்வகுணமே
சத்ய ஞானபேரானந்தமேசிவனின் பாதியேஅறுபத்து நான்கு கலைகள் கழுத்தில் மாலையே
வேண்டியதைத் தரும் காமதேனுவேவிரும்பிய வடிவெடுப்பது உன் ஆற்றலே
கலையின் காரணமேகாவ்ய கலையேகாவ்யரஸம் அறிந்தவளேபேரானந்தப்பெட்டகமே
செழுமையேஅனாதியேதுதிக்கத் தகுந்தவளேதாமரைக் கண்ணியே
பரஞ்சோதி சிறந்தவளேஅணுவிற்கு அணுவேமும்மூர்த்திகள் உனக்கிலைஈடே
பாசம் ஏந்தியவளேபாசம் நீக்குபவளேபகைவரின் அஸ்த்ர மந்திரத்தைபிளப்பவளே
உருவமேஅருவமேநிறைவு உள்ளவளேமுனிவர் மனத்தின் அன்னமே
சத்ய வடிவேசத்ய வாக்கிற்கு எளியவளேசெயல் வடிவேதாட்சாயணீ
பிரம்மாணிவேதமாதா படைப்பவளேஅநேக வடிவேஞானிகள் தியானமே
தோற்றுவிப்பவளேஆதாரமேகோபாக்னியேஅனைவரும் அறியும் உருவே
ஆத்மாவின் புலன்களின் தலைவி கர்ம பலனைத் தரும்தேவி சக்திபீடம் நீ
தடைஇலாதவளேவிவேவிகள் ஸ்ருதய வாஸியேநல்லவர் தாயேஆகாயம் ஆக்கியவளே
முக்தி தருபவளேமுக்தி இருப்பிடமேராஜராஜேஸ்வரியே
எண்ணும் எண்ணங்களைஅறிபவளேபிறவிப்பிணி நீக்கி பிறவிச் சக்கரம் சுழற்றுபவளே
வேத சாஸ்த்ர மந்த்ர சாரமேசிறந்த உன் வயறு சிறியதே
பரந்தது உன்பெருமையேஎழுத்து வடிவேதேவி
பிறவித் துயரகற்றி வீடுபேறு தருபவளே
உபநிடம்போற்றும் உயர்ந்தவளேஉன் கலைவடிவு அமைதியைமிஞ்சுமே
ஆழமானவளேஆகாசத்தில் இருப்பவளேபெருமிதமானவளேசங்கீத ரஸிகையே
கற்பனைஅற்றவளேமுடிவேபாப நாஸினி பரமன் இடப்பாகம் இருப்பவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
காரண கார்யம் உனக்கிலையேகாமேஸ்வரன் கலைகள் உன் அருட் கடலிலே
மின்னும் தடாகம் காதிலேஉருவங்கள் எல்லாம் உன் விளையாட்டே
பிறப்பற்றவளேசெளந்தர்யமேபக்தரைக் கடுகிக் காப்பவளே
உன் மனதின்தேடலேஅறிவால் அறியவொணா ஆற்றலே
மூன்றுவேத வடிவேமுப்பாலுக்கப்பால் நின்றவளேதிரிபுரத்தில் இருப்பவளே
ஆறாம் ஆவரணமேபிணியற்றவளேபிடிப்பொழித்தவளேதானேரஸிக்கும் ஸஹஸ்ரார அம்ருதமே
சம்ஸார சகதியில்கைகொடுப்பவளேதவம் யாகம் விரும்புவளே
வேய்வியைச்செய்பவளேதலைவியே
தர்மத்தின் ஆதாரமேமஹாலக்ஷ்மியேதனம் தான்யம் தருபவளே
வேத ஒலியில் மகிழ்பவளேஉலகம் சுழல்வது உன்னாலே
உலகைக் கவளமாய் உண்பவளேபவளமேவிஷ்ணுமாயே
பிறப்பின் காரணமேஉலகப் படைப்பின் உற்பத்தி மூலமேஅசையாதவளேதர்மத் தலைவியே
சக்தி உபாஸனையில் இஷ்டமுள்ளவளேவீரமாதாசெயலற்றவளேநாத வடிவே
ஆத்மாவைஅறிந்தவளேகலா அரசி தந்திரசாலி பிந்து ஆஸன வாஸினி
முப்பத்தியாறு தத்துவம் கடந்தவளேஆத்ம வித்யா சிவதத்வ ஸ்வரூபிணி
பரமும்ஜீவனுமானவளேஸாமகானப்யேசந்த்ரிகையேசிவா பத்னியே
ஸ்ருஷ்டி லயம் உன்னிடத்திலேஆபத்ஸஹாயினி தானேதானாய் ஆனவளே
ஆனந்தத்தின் உறைவிடமேஅறிவில் சிறந்தவளேபுத்தி தருபவளே
விஸேஷ அர்க்யம் உன் ஆராதனைசைதன்ய மலரைவிரும்புபவளே
உதயமேசந்தோஷியேஉதிக்கின்றசூரிய நிறத்தவளே
உமையேலலிதாம்பிகையேஅன்னையேசரணம்
படித்தோரும் பாமரரும் துதிக்கும்தேவி உன் சிரிப்பு பூத்த தாமரையே
காலத்தின் சூத்ரதாரியேவீடுபேறு தருபவளே
ஸஹஸ்ர நாமப்ரியேகல்விசெல்வம் தருபவளேவேதம்போற்றும்பெருமையே
மனதின் கடிவாளமேபெருந்தன்மையளேமஹேஸ்வரி மங்களமே
உலகின் அன்னையேஉலகின் தூணேஅகன்றகண்ணழகியே
மனோபலம் உள்ளவளேவீரச்செல்வி தர்மசாலினி ஆனந்தி அன்பான நல்லறிவே
சிவனின் துணைவிதேவர் விமானவாஸினி இந்த்ராணி
தேவர் தலைவி பஞ்ச யாகங்களில் மகிழ்பவளேபஞ்ச பிரேதங்களும் உன் மஞ்சமே
Slide 8
சதாசிவ பத்னி பஞ்சபூதத் தலைவி கந்த மலர் தூப தீப நிவதேனங்கள் உபசாரமே
அழியாதவளேசெல்வம்கொண்டவளேஇன்பத்தின் உறைவிடமேசிவனைமயக்குபவளே
பூதேவியேபர்வத ராஜகுமாரிசெல்வியேஅறம் வளர்த்த நாயகி
ஞாலம் குணம் கடந்தவளேசாந்த ஸ்வரூபிணியே
பந்தூக மலர் ஒளியேபாலாம்பிகையேப்ரபஞ்சம் உன் விலையே
சுமங்கலியேபேரானந்தப் படகு அழியாததேஅலங்கார ரூபிணியே
சுமங்கலி பூஜையில் மனம் நிறைபவளேஇளமைஅழகு உள்ளவளே
தூய மனத்தவளேபிந்து தர்ப்பணம் ஏற்பவளேமுதலேத்ரிபுராம்பிகையே
தச முத்திரைகள் ஆராதனையேத்ரிபுராஸ்ரீ உன் வசமே
ஞானமேஞானத்தால் உனைஅடையலாமேஅறிவும் அதுபோன்றதும் நீயே
யோனி முத்திரைவடிவேஸோம சூர்ய அக்னி முத்திரைத் தலைவியேமுக்குணமே
அதன் தாயேஸ்ரீ சக்ர வாஸினி புண்ய ரூபிணி அற்புத சரித்ரமேவேண்டுவது தருபவளே
ஆழ்நிலைத் தியானம் உன்னைக் காட்டுமேஆறு உபாஸனைகளைக் கடந்தவளே
தாயினும் சாலப் பரிந்து வருபவளேஞான ஒளியேற்றும் தீபமே
சிறியோரும்பெரியோரும் உனைஅறிவாரேஉன் கட்டளைமீறுவார் யாரே
ஸ்ரீ சக்ரம் உன் இருப்பிடமேஸ்ரீமதி த்ரிபுரஸுந்தரி பரம மங்களரூபிணி
சிவசக்தி ரூபிணி ஸ்ரீ லலிதாம்பிகா
உலகைக் கடந்தவளேஉன்னதமானவளே
ஸ்ரீ லலிதாதேவி உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்
Tags
tamil devotional songs lalitha
Categories
General
Download
Download Slideshow
Get the original presentation file
Quick Actions
Embed
Share
Save
Print
Full
Report
Statistics
Views
3,583
Slides
8
Favorites
1
Age
978 days
Related Slideshows
22
Pray For The Peace Of Jerusalem and You Will Prosper
RodolfoMoralesMarcuc
36 views
26
Don_t_Waste_Your_Life_God.....powerpoint
chalobrido8
39 views
31
VILLASUR_FACTORS_TO_CONSIDER_IN_PLATING_SALAD_10-13.pdf
JaiJai148317
35 views
14
Fertility awareness methods for women in the society
Isaiah47
32 views
35
Chapter 5 Arithmetic Functions Computer Organisation and Architecture
RitikSharma297999
31 views
5
syakira bhasa inggris (1) (1).pptx.......
ourcommunity56
32 views
View More in This Category
Embed Slideshow
Dimensions
Width (px)
Height (px)
Start Page
Which slide to start from (1-8)
Options
Auto-play slides
Show controls
Embed Code
Copy Code
Share Slideshow
Share on Social Media
Share on Facebook
Share on Twitter
Share on LinkedIn
Share via Email
Or copy link
Copy
Report Content
Reason for reporting
*
Select a reason...
Inappropriate content
Copyright violation
Spam or misleading
Offensive or hateful
Privacy violation
Other
Slide number
Leave blank if it applies to the entire slideshow
Additional details
*
Help us understand the problem better